/
கோயில்கள் செய்திகள் / சிவகாசி பத்ரகாளியம்மன் சித்திரை பொங்கல் திருவிழா 3 ம் நாள்; பிரம்மாண்ட சிலைகள் ஊர்வலம்
சிவகாசி பத்ரகாளியம்மன் சித்திரை பொங்கல் திருவிழா 3 ம் நாள்; பிரம்மாண்ட சிலைகள் ஊர்வலம்
ADDED :557 days ago
சிவகாசி; சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் 3 ம் நாள் திருவிழாவில் பிரம்மாண்ட சாமி சிலைகள் ஊர்வலமாக வந்தது.
சிவகாசி பத்ரகாளியம்மமன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப். 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் , வாகனம், காமதேனு வாகனம், கைலாச பர்வத வாகனம் , வேதாள வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 3 ம் நாள் திருவிழாவான நேற்று இரவு காளீஸ்வரி குழுமம் சார்பில் பிரம்மாண்ட சாமி சிலைகள் வாகனத்தில் ஊர்வலமாக வந்தது. சிவன், அம்மன், உள்ளிட்ட சுவாமிகள் பிரமாண்ட சிலைகளின் வடிவில் காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.