கருமாரியம்மன் கோவிலில் பாலமுருகனுக்கு அபிஷேகம்
ADDED :558 days ago
கோவை; நேரு ஸ்டேடியம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் பாலமுருகனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருக பெருமான் அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.