மழை வேண்டி கழுதைகளுக்கு வரும் 5ல் திருமணம்
ADDED :559 days ago
அன்னூர்; மழை வேண்டி, லக்கேபாளையம் கோவிலில், வரும் 5ம் தேதி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அன்னூர் பகுதியில், இந்த ஆண்டு அனல் பறக்கும் வெயில் அடிக்கிறது. மூன்று மாதங்களாக மழை இல்லை. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. குளம், குட்டைகள், விளையாட்டு மைதானங்களாக மாறிவிட்டன. கால்நடைகள் மேய்ச்சலுக்கு கூட புற்கள் இல்லாமல் தவிக்கின்றன. இதையடுத்து மழை பெய்வதற்காக லக்கேபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் வருகிற 5ம் தேதி காலை 8:00 மணிக்கு கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சி ஏற்பட்ட போது கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு மழை பெய்தது என ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.