உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவிற்கு குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்

கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவிற்கு குளத்தில் நீர் நிரப்பும் பணி தீவிரம்

காரைக்குடி; கொப்புடையநாயகி அம்மன் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு குளத்தில் நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா நேற்று மே 7 ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் காலை 9 மணிக்கு வெள்ளிக்கேடயதில் அம்பாள் புறப்பாடும் பக்தி உலாவும் இரவு தீபாராதனை பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. மே 16 ஆம் தேதி மாலை தெப்பத்திருவிழாவும் மறுநாள் அதிகாலை புஷ்ப பல்லாக்கும் நடைபெறுகிறது. தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, தெப்பத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !