திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கியது.தினம் விநாயகர், சுப்ரமணியன் சுவாமி வீதியுலா கடந்த 13ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்பபல்லக்கு வீதி உலா, நேற்று செண்பகத் தியாகராஜர் வசந்த மண்டபத்திலிருந்து உன்மத்த நடனத்துடன் யதாஸ்தானம் எழுந்தருளினார். பின்னர் இரவு இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 17ம் பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா முக்கிய நிகழ்ச்சியான 19ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.20ம் தேதி சனிஸ்வரபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா,21ம் தேதி தெப்ப உற்சவமும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.