நாக வாகனத்தில் வீதியுலா வந்த வடபழனி ஆண்டவர்; இன்றிரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 10 நாள் பிரம்மோற்ச வம் கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு மங்கள கிரி விமானத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.
விழாவின் இரண்டாம் நாள் சூரிய, சந்திர பிரபை புறப்பாடும், மூன்றாம் நாள் இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய் வானை சமேத சுப்பிர மணியர் வீதி உலாவும் நடந்தது. விழாவின் நான்காம் நாளான நேற்று காலை, மங்களகிரி விமான புறப் பாடு நடந்தது. நேற்று இரவு நாக வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். ஐந்தாம் நாள் விழாவில், இன்றிரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், நாளை இரவு யானை வாகன புறப் பாடும் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான, 19ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணி முதல் 8:00 மணிக் குள், பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது.
குதிரை வாகன புறப் பாடு, 20ம் தேதி நடக் கிறது. 21ம் தேதி இரவு 7:00 மணிக்கு, வடபழனி ஆண்டவர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகமான, 22ம் தேதி காலை 9:00 மணிக்கு வள்ளி, தேவ சேனா சமேத சண்முகர் விதி உலா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவ மும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகனத்தில் புறப் பாடு நடக்கிறது. பின். சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து, கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.