உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலக்காடு பிரசன்னா மஹா கணபதி கோவில் பிரதிஷ்டா தின உற்சவம்

பாலக்காடு பிரசன்னா மஹா கணபதி கோவில் பிரதிஷ்டா தின உற்சவம்

பாலக்காடு; சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில் பிரதிஷ்டா தின உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்பாத்தி அருகில் உள்ளது சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில். இங்கு வைகாசி மாதம் பிரதிஷ்டா தின உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் இன்று (28 ம்தேதி) காலை நடை திறந்ததும் ஆரம்பித்தன. காலை கணபதி ஹோமம், 8:00 மணிக்கு பூர்ணாபிஷேகம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பில் "காழ்சசீவேலி நிகழ்வு நடந்தன. 11:30 மணிக்கு கும்பாபிஷேகம், 12:15 மணிக்கு புஷ்பாபிஷேகம் ஆகிய நிகழ்வு நடைபெற்றது. இதை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தன. மாலை பஞ்சவாத்தியம் முழங்க ஐந்து யானைகளின் அணிவகுப்பு உடன் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !