காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமி தரிசனம்
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதி குடும்பத்தாரோடு சாமி தரிசனம் செய்தார்.
காளஹஸ்தி வந்த நீதிபதியை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர்.கோயிலுக்குள் சென்ற நீதிபதி சேஷ சாயி தனது குடும்பத்தினருடன் ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள ம்ருத்யுஞ்சய ஸ்வாமி சன்னதியில் தரிசனம் செய்தார். அவர்களை கோவில் துணை செயல் அலுவலர் சதீஷ் மல்லி பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். மேலும் கோயில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களால் சிறப்பு ஆசீர்வாதம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் நாகபூஷணம், நாகபூஷணம் யாதவ் 12வது கூடுதல் மாவட்ட கூடுதல் சிவில் நீதிபதி கிருஷ்ணபிரியா மற்றும் கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.