உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி கிருத்திகை; முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு

வைகாசி கிருத்திகை; முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு

கோவை ; வைகாசி மாதத்தில் வரும் கிருத்திகை விரதத்தை முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் வின்சென்ட் காலனி உழவர் சந்தை எதிரே அமைந்திருக்கும் வரலட்சுமி விநாயகர் - கல்யாண சுப்பிரமணியர்  கோவிலில் முருகப் பெருமானுக்கும் வள்ளி - தெய்வானை தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகன் மற்றும் வள்ளி தெய்வானை அருள்பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !