தாங்கும் கைகள்
ADDED :544 days ago
உயரத்தில் இருந்த ஒருவர் பள்ளத்தில் தவறி விழுந்தால் இறப்பு வரும் வரை மட்டுமே வேதனை. ஆனால் பாவமாகிய பள்ளத்தில் விழுந்தால் ஒட்டு மொத்த வாழ்வே கேள்வி குறியாகி விடும். தவறு செய்தவர்கள் மற்றவர்களின் முன் தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ளலாம். ஆனால் மனசாட்சியிடம் இருந்து யாரும் தப்ப முடியாது. இதில் இருந்து தப்பிக்க ஒழுக்கம் ஒன்றே வழி. ஒழுக்கத்தில் இருந்து விலகாதபடி நம்மை காப்பவர் ஆண்டவர் ஒருவரே. அவரது கைகள் நம்மைத் தாங்கிப் பிடிக்கின்றன.