சதுர்த்தி விரதம்; கணபதியை வழிபட கவலைகள் தீரும்..!
ADDED :551 days ago
விநாயகரை வழிபட சிறந்த நாள் சதுர்த்தி தினம். அமாவாசையில் இருந்து வரும் நான்காவது திதி சதுர்த்தியாகும். சதுர்த்தியில் விநாயகரை வழிபட சகல விதமான துன்பங்களும் நீங்கும். விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. சங்கடம் என்றால் துன்பம். ஹர என்றால் அழித்தல். அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடியது சதுர்த்தி என்பதால் இந்த நாளில் விநாயகரை நினைத்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும். முதலில் தன் தாய் பார்வதிக்கு கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது எல்லாம் இவ்விரதம் இருந்து தான். பாண்டவர்க்கு கண்ணபிரானே இவ்விரதத்தின் மகிமையை உபதேசித்துள்ளார்.