எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :497 days ago
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
எமனேஸ்வரம் பெருந்தேவி, வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வைகாசி வெள்ளிக்கிழமைகளிலும் ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். நேற்று மாலை வைகாசி கடைசி வெள்ளிக் கிழமையையொட்டி தாயார் மண்டபத்தில், வரதராஜ பெருமாள், பெருந்தேவி தயார் ஊஞ்சலில் சேவை சாதித்தனர். அப்போது பஜனை பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.