உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி பவுர்ணமி; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஆனி பவுர்ணமி; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

கோவை; பவுர்ணமி தினத்தையொட்டி மதுக்கரை மலை மேல் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பவுர்ணமியும் வெள்ளிக்கிழமையும் இணைந்து வரும் நாள் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் வழிபட்டால் சிவனை வழிபட்டால் தடைப்பட்ட காரியங்கள் யாவும் நடந்தேறும். வீட்டில் மங்கல காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மதுக்கரை மலை மேல் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. இக்கோயிலில் இன்று பவுர்ணமி, வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !