கோவில்பட்டி வேணுகோபாலசுவாமி கோயிலில் ஆனி ஏகாதசி பூஜை
ADDED :479 days ago
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் பாமா ருக்குமணி சமேத வேணுகோபாலசுவாமி கோயிலில் ஆனி மாத சர்வ ஏகாதசி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதையொட்டி மூலவர் வேணுகோபாலசாமிக்கும், அம்பாளுக்கும் திருமஞ்சனம், விஸ்வரூபூஜைகள், சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. துளசி, ரோஜா, மல்லிகை, சம்மங்கி, உள்ளிட்ட பல்வேறு மாலைகளை பக்தர்கள் செலுத்தி தரிசனம் செய்தனர். நத்தம் கோவில்பட்டி சுற்றப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போல் வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலிலும், வேம்பார்பட்டி வேங்கடேச பெருமாள் கோவிலிலும் ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது.