உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம்; வெள்ளிக்கவசத்தில் சுவாமி உலா

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம்; வெள்ளிக்கவசத்தில் சுவாமி உலா

திருவண்ணாமலை ; அருணாசலேஸ்வரர் கோவிலில், தக்ஷிணாயன புண்ணிய கால  ஆனி பிரம்மோற்சவ நான்கம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கவசம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மாட வீதி உலா வந்து அருள்பாலித்தார்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலுள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு, 4 முறை கொடியேற்றம் நடக்கிறது. சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக, ஆனி பிரம்மோற்சவம் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தாண்டு ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் நான்கம் நாள் காலை உற்சவத்தை முன்னிட்டு, உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் வெள்ளிக்கவசம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மாட வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !