உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவக்கம்

மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவக்கம்

திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி துவக்க விழா நடந்தது.திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையில் பழமை வாய்ந்த பிரயோக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில், கோவிலைப் புனரமைக்க வேண்டி பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 1.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, திருப்பணி துவக்க நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. பட்டாச்சாரியார்கள் வேதம் மந்திரம் முழங்க, திருப்பணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பாலாஜி பூபதி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ரேவதி, பேரூராட்சி தி.மு.க., நகர செயலாளர் ஜெய்கணேஷ், பேரூராட்சி துணைத் தலைவர் தம்பிதுரை, அறநிலையத்துறை செயல் அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர செயலாளர் தெய்வசிகாமணி, அறங்காவல் குழு தலைவர் சிவராமன், எழுத்தர் நரேஷ் குமார் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !