உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஷாட ஏகாதசி; கருவறைக்குள் சென்று பாண்டுரங்கனை வழிபட்ட பக்தர்கள்

ஆஷாட ஏகாதசி; கருவறைக்குள் சென்று பாண்டுரங்கனை வழிபட்ட பக்தர்கள்

திருப்பூர், ராயபுரம் ஸ்ரீபாண்டுரங்கன் ருக்மாயி கோவிலில் ஆஷாட ஏகாதசி விழாவை முன்னிட்டு கருவறைக்குள் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


ஆஷாட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருப்பூர் ராயபுரம் பாண்டுரங்கன் கோவிலில் மூலவரின் பாதத்தை தொட்டு தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று நடைபெற்ற மகோற்சவத்தில் பாதுகை சேவை நிகழ்ச்சியில், பண்டரிநாதன் மூலவரின் பாதத்தை தொட்டு, பக்தர்கள் வணங்க அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தொட்டு வணங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !