திண்டிவனம் தீர்த்தக்குளம் பாலமுருகன் கோவிலில் தீமிதி விழா
ADDED :468 days ago
திண்டிவனம்; திண்டிவனம் தீர்த்தக்குளம் பாலமுருகன் கோவிலின் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தீ மிதி விழா நடந்தது. இக்கோவிலில் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் பாலமுருகனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. நேற்று காலை சக்திவேல் பூஜை காவடி அபிஷேகம், மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. மாலை பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து நடந்த தீ மிதி விழாவில் பக்தர்கள் தீ மதித்தும், அலகு குத்தி தேர் இழுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.