உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி மாத பிறப்பு; கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அபிஷேகம் சிறப்பு பூஜை

ஆவணி மாத பிறப்பு; கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அபிஷேகம் சிறப்பு பூஜை

கோவை; கோவை உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாத பிறப்பு மற்றும் மாதத்தின் முதல் சனிக்கிழமையையொட்டி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி களுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் முதல் நிகழ்வாக காலை 9 மணி அளவில் திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம் நடைபெற்றது. அதை தொடர்ந்து நெய்வேதிய பூஜை, மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் உற்சவமூர்த்திகள் மகாலட்சுமிதாயார், நாராயண பெருமாள்,ஹயக்ரீவர்,ஸ்ரீதேவி பூதேவி தாயருடன் கரிவரதராஜ பெருமாள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !