ரூ.5 லட்சம் ரூபாய் நோட்டுகளால் கும்பகோணம் பகவத் விநாயகருக்கு குபேர அலங்காரம்
கும்பகோணம் ; விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூ.5 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு கும்பகோணம் பகவத் விநாயகருக்குக் குபேர அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாடுமுழுவதும் வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கும்பகோணம் மடத்து தெருவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படும் பகவத் விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தினந்தோறும் விநாயகருக்கு பல்வேறு வகையான சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று பகவத் விநாயகருக்கு ரூ.5லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு சிறப்பு குபேர விநாயகார் அலங்காரம் செய்யப்பட்டு விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குபேர விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.