ஆவணி உத்திரம்; கோவை ஐயப்பன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :471 days ago
கோவை; ஆர். எஸ். புரம் பொன்னைய ராஜபுரம், புட்டு விக்கி ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் ஆவணி மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள ஐயப்பன் சன்னதியில் மூலவர் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.