உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சம்பா சஷ்டி, சஷ்டி விரதம்; வீட்டில் விளக்கேற்றி வழிபட அனைத்தையும் தருவான் வேலவன்!

சம்பா சஷ்டி, சஷ்டி விரதம்; வீட்டில் விளக்கேற்றி வழிபட அனைத்தையும் தருவான் வேலவன்!

முருகா என்றால் மும்மூர்த்திகளின் அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் சஷ்டி வழிபாடு மிக சிறந்தது. திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு உகந்த சஷ்டி திதியாகும். முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். மன்மதன் போல அழகுடன் திகழ்வர் என கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். சரவணபவ சொல்லி வீட்டில் விளக்கேற்றி வழிபட வேண்டும். இன்று விரதம் இருந்து வழிபட வேண்டியது அனைத்தையும் தருவான் வேலவன். 12 கரங்கள் கொண்ட ஆறுமுகனை வழிபடுவோம்.. பயம் இன்றி வாழ்வோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !