அண்ணாமலையார் கோவிலில் அஷ்டமி பூஜை; காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :467 days ago
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவில் கால பைரவர் சன்னதியில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கபட்டது. இதைப்போலவே நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் பைரவர் சன்னதியிலும் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.