உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

கோவை; கோவை, ராம் நகர், பட்டேல் ரோடு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் புரட்டாசி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேதரராக புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !