தேய்பிறை அஷ்டமி ; உத்தரகோசமங்கையில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
உத்தரகோசமங்கை, செப். 26- உத்தரகோசமங்கை மங்களநாதர் சன்னதி முன்புறமுள்ள சேத்திர கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வெற்றிலை மற்றும் செவ்வரளி மாலைகள் சூட்டப்பட்டு உளுந்த வடைகள் கோர்க்கப்பட்டு அணிவிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* சாயல்குடி அருகே மாரியூரில் உள்ள பூவேந்தியநாதர் கோயிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு மூலவர் காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வெற்றிலை மாலை சாற்றப்பட்டது.
* கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள நாராயணசாமி கோயிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.