நவராத்திரி ஆறாம் நாள்; நாகமுத்து மாரியம்மன் கோலத்தில் அருள்பாலித்த அம்மன்
ADDED :467 days ago
கோவை; சாய்பாபா காலனி, கே. கே. புதூர் தெரு எண் - 08 ல் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாள் வைபவத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. மூலவர் அம்மன் நாகமுத்து மாரியம்மன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.