ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கால பைவரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :436 days ago
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கால பைவரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம்வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருவாடானை சம்ஹார பைரவர்குழு, நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.