உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஐப்பசி ஏகாதசி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !