உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை

திருவாடானை பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை

திருவாடானை; திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயில்களில் நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகை அபிேஷகங்கள் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !