உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வாஸ்து பகவானுக்கு சிறப்பு பூஜை

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வாஸ்து பகவானுக்கு சிறப்பு பூஜை

உடுமலை; செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வாஸ்து தினத்தையொட்டி, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. உடுமலை அருகே செல்லப்பம்பாளையத்தில், ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், தனிச்சன்னதியில், வாஸ்து பகவான் அருள்பாலித்து வருகிறார். இன்று வாஸ்து தினத்தையொட்டி, வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !