/  
                        கோயில்கள்  செய்திகள்  /  தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு; நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
                      
                      தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு; நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
                              ADDED :367 days ago 
                            
                          
                          
தஞ்சாவூர், உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள் என பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ நாள்களில் ஏராளமான பக்தர்கள் வில்வ இலை,பால் உள்ளிட்ட பொருட்களை நந்தியம் பெருமானுக்கு வழங்கி வழிபடுவார்கள். அதன்படி இன்று பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், திரவிய பொடி, தயிர், திருநீறு, பஞ்சாமிர்தம் போன்ற மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அத்துடன் பெருவுடையார், பெரியநாயகி, வராஹி அம்மன் உள்ளிட்ட சுவாமிகளையும் தரிசனம் செய்து சென்றனர்.