பழநியில் பக்தர்கள் கூட்டம்; காத்திருந்து தரிசனம்
ADDED :345 days ago
பழநி; பழநி கோயிலுக்கு ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது.
பழநி கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். வெளி மாநில, வெளியூர், உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தனர். முடி காணிக்கை மையத்தில் இலவசமாக பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். வின்ச் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். தரிசன வரிசையில் சில மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். பழநி கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் நடைபெறுகிறது. பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து உணவு அருந்தி செல்கின்றனர்.கைக்குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கபடுகிறது. பக்தர்களுக்கு போதுமான அளவு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கிரி வீதியில் பேட்டரி கார் மற்றும் பஸ் மூலம் இலவசமாக பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.