திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரருக்கு ஐப்பசி அன்னாபிஷேகம்; பக்தர்கள் பரவசம்
ADDED :329 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு, காலை மூலவர் வீரட்டானேஸ்வரர் உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அன்னம், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு, சிவனடியார்களின் கைலாய வாத்தியம் முழங்க, சிவாச்சாரியார்களின் வேத மந்திரத்துடன் மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.