உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் இன்று நடந்த கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷ பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி, கிளி கோபுரம் அருகில் உள்ள அதிகார நந்தி, தங்க கொடி மரம் அருகில் உள்ள சிறிய நந்தி ஆகியவற்றிற்கு, பால், பன்னீர், அபிஷேக பொடி, மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.  இதில், ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !