உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; டிசம்பர் 1 வரை பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; டிசம்பர் 1 வரை பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை வழிபாட்டிற்கு டிசம்பர் 1ம் தேதி வரை, தினமும் காலையில் மழையை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நேற்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மழையின் காரணமாக மிகவும் குறைவான பக்தர்களே கோயிலுக்கு வந்திருந்தனர். கோயிலில் பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். இதனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் நாளை (நவ.30) கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்காக டிச.1 வரை தினமும் காலையில் மழையை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !