வேம்பத்துார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருவோண பூஜை
ADDED :428 days ago
மானாமதுரை; வேம்பத்துாரில் பூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருவோண பூஜையை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தயிர், நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சுவாமிகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற்றன. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.