சிவபுரிபட்டி சுயம்பிரகார ஈஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்
                              ADDED :326 days ago 
                            
                          
                          
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுயம்பிரகார ஈஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து புனித நீரைக்கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.