கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிஷேகம்
ADDED :501 days ago
புதுச்சேரி; கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், கார்த்திகை மாத 4ம் திங்கள் கிழமையையொட்டி, இன்று காலை ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அதனையொட்டி காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் நடந்தது. பின்னர், மகா அபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை, அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். பூஜைகளை தேவசேனாதிபதி குருக்கள் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.