உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்காபிஷேகம் செய்த பலன்!

சங்காபிஷேகம் செய்த பலன்!

சிவசின்னங்களில் முக்கியமானது ருத்ராட்சம். இதற்கு சிவனின் கண் என்று பொருள். தாராகாட்சன், கமலாட்சன், வித்யன்மாலி என்ற அசுரர்களை சிவன் நெற்றிக்கண்ணால் எரித்தார். அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியால் சிவன் ஆனந்தக்கண்ணீர் விட்டார். அக்கண்ணீரே ருத்ராட்ச விதைகளாக மாறின. ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளின் எண்ணிக்கையை முகம் என்று குறிப்பிடுவர். இதில் ஒருமுகம் முதல் பதினாறு முகம் வரை இருக்கும்.  ஒருமுக ருத்ராட்சம் மிகவும் சிறப்பானது. இதை அணிபவர் பூவுலக வாழ்வு முடிந்து சிவலோக வாழ்வு பெறுவர். ருத்ராட்சத்தை அணிந்து நீராடுவது கங்கையில் குளித்த புண்ணியத்தை தரும். ஒருமுக ருத்ராட்சம் அணிந்து நீராடினால் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தபலன் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !