உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் சொக்கப்பனை தீபம் விமரிசை

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் சொக்கப்பனை தீபம் விமரிசை

காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில், பரணி தீபத்தையொட்டி, நேற்று இரவு 8:30 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு கச்சிவாய்த்தான் மண்டபத்தில் திருமஞ்சனமும், இரவு 9:30 மணிக்கு மூலவருக்கு தைலகாப்பு சமர்ப்பித்தலும், இரவு 10:00 மணிக்கு பெருமாளுக்கு திருவாராதனமும், நிவேதனமும் நடந்தது. விஷ்ணு கார்த்திகையான இன்று மாலை 6:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து, பெருமாள் உபயநாச்சியாருடன், திருமுற்றவெளி எனப்படும் கோவில் கொடிமரம் முன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பல்வேறு பூஜைகளுக்கு பின், சுவாமி முன், 20 அடி உயரத்திற்கு பனைமரத்தில், பனை ஓலைகள் சுற்றி கட்டப்பட்டு, சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பெருமாள் மாட வீதி புறப்பாடு நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !