மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு 1,008 வலம்புரி சங்காபிஷேகம்
ADDED :298 days ago
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், கார்த்திகை பிறந்து, ஐந்தாவது சோமவாரத்தை முன்னிட்டு, 1,008 சங்காபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
சென்னை, மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில், கார்த்திகை மாதம் துவங்கியதில் இருந்து, நான்கு சோமவாரங்களிலும், 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. தற்போது, மார்கழி மாதம் பிறந்தாலும், கார்த்திகை மாதம் பிறந்து ஐந்தாவது சோமவாரமான நேற்று, 1,008 சங்காபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் சங்கு ஸ்தாபனம் நடந்தது. நேற்று காலை தீபாராதனையும், அதைத்தொடர்ந்து, கலச புறப்பாடு நடந்தது. நேற்று நண்பகல் கபாலீஸ்வரருக்கு, 1,008 வலம்புரி சங்குகளில் புனித நீரால் அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கபாலீஸ்வரரை தரிசித்தனர்.