திருவண்ணாமலையில் பகவான் ரமணரின் 145ம் ஆண்டு ஜெயந்தி விழா
ADDED :372 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ரமணர் ஆஸ்ரமத்தில், ரமணரின், 145ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. இதில், இசையமைப்பாளர் இளையராஜா, ரமணரின் கீர்த்தனைகளை பாடினார். திருவண்ணாமலை, செங்கம் சாலையிலுள்ள ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில், ரமண பகவானின், 145ம் ஆண்டு ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி, பகவான் ரமணர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரித்து, சிறப்பு பூஜை நடந்தது. மேலும், மஹன்யாச ருத்ர ஜபம், தனுர் மாத பாராயணம், ஜெயந்தி தின சிறப்பு பாராயணம், ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா ரமணரின் பாடல்களை பாடினார். மேலும், ஏராளமான பக்தர்கள் ரமணரை போற்றி பாடி, பிரார்த்தனைசெய்து வழிபாடு நடத்தினர்.