உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி தினம்; வடவள்ளியில் சிறப்பு அபிஷேகம்

காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி தினம்; வடவள்ளியில் சிறப்பு அபிஷேகம்

கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் மகாசங்கர மினி ஹாலில் மார்கழி மாதம் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு மகா பெரியவா ஆராதனை மகோத்சவம் நடைபெற்றது.  முதல் நிகழ்வாக காலை 5 மணிக்கு கோ பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆவஹந்தி ஹோமம் நடந்தது. காலை 8 மணி அளவில் மகா பெரியவர் விக்கிரகத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மகா பெரியவர் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !