உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி மகா பிரதோஷம்; சிவபெருமானை தரிசித்து சகல நன்மைகளும் பெறுவோம்..!

சனி மகா பிரதோஷம்; சிவபெருமானை தரிசித்து சகல நன்மைகளும் பெறுவோம்..!

சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  சகல துன்பங்களும் தீரும். நந்தியம் பெருமானுக்கும் அபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு பிரதோஷ தினம். இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது அதிலும் குறிப்பாக சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காரணம் இந்த நாளில் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள் என்றும் அந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே ஆசீர்வதிக்கும் என்பதும் நம்பிக்கை. இன்று சிவபெருமானை தரிசித்து சகல நன்மைகளும் பெறுவோம்..!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !