அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தருமை ஆதீனம் சாமி தரிசனம்
ADDED :285 days ago
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம் செய்தார். கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு இன்று மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரை மேளதாள நாதஸ்வரங்கள் முழங்க வரவேற்ற கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர் குழுவினர் மற்றும் சிவாச்சாரியார்கள் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். தருமை ஆதீனம் அவிநாசி கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, அம்மன் சன்னதி ஆகியவற்றில் தரிசனம் செய்துவிட்டு கனக சபையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாளை தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.