சரியான தீர்ப்பு
                              ADDED :280 days ago 
                            
                          
                          
இல்லறம், துறவறம் எது சிறந்தது என்ற விவாதம் நிகழ்ந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தாயுமானவர் அவர்களிடம், ‘ஆட்டுபவன் இல்லாமல் பம்பரம் தானாக ஆடுமா? ஆடாது. அது போல, அண்டம் அனைத்தையும் ஆட்டுவிப்பவர் கடவுள். ஒரு மனிதன் இல்லறத்தில் ஈடுபட்டாலும், துறவறத்தில் ஈடுபட்டாலும் ‘நான்’ என்ற ஆணவம் கொள்ளக் கூடாது. ‘எல்லாம் அவன் செயல்’ என்ற எண்ணமுடன் அடங்கி நடந்தால் இல்லறம், துறவறம் இரண்டும் சிறந்தது. இல்லாவிட்டால் இரண்டுமே தாழ்ந்தது” எனத் தீர்ப்பளித்தார்.
இதைக் கேட்ட இரு தரப்பும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.