கரி வரதராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால திருமஞ்சனம்
ADDED :332 days ago
கோவை;உக்கடம் கோட்டைமேடு ஸ்ரீ பூமி நீளாநாயகி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மாசி மாத விஷ்ணுபதி புண்ணிய கால திருமஞ்சனம், மகாலட்சுமி அபிஷேக பூஜை நடந்தது. இதில் மகாலட்சுமி தாயார் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.