திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய அமைச்சர் தரிசனம்
ADDED :262 days ago
காரைக்கால்; திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா சுவாமி தரிசனம் செய்தார். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரர் கோவிலுக்கு நேற்று காலை மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா வருகை தந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், தர்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகர், அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். இறுதியாக சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, 9 தீபம் ஏற்றி, காக்கைக்கு எள்ளு சாதம் வழங்கி, சுவாமி தரிசனம் செய்தார்.