உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம்

சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம்

புதுச்சேரி; சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. சாரம் முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, 7:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நாக முத்து மாரியம்மனுக்கு கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன் நீலகண்டன் செய்திருந்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !