இன்பமும் துன்பமும் கலந்த முரண்பாடான வாழ்க்கை ஏன்?
ADDED :4724 days ago
இன்பம் மட்டுமே இருந்தால் வாழ்வு சலித்துவிடும். எல்லாம் துன்பமயம் என்றால் வெறுத்துப் போகும். இன்ப துன்பம் இரண்டும் இரவுபகல் போல நம்மை தொடர்வதால் தான், வாழ்வில் ரசனையே இருக்கிறது. பரமபத விளையாட்டில் ஏணியின் ஏற்றத்திலும், பாம்பின் இறக்கத்திலும் தானே விளையாட்டின் சுவாரஸ்யமே அடங்கி இருக்கிறது.